உண்மையாக இருந்துவிடு!

சத்தமுடன் சத்தியம் பேசு தீயோர்பக்கம் நின்றாலும்
நித்தம் நித்தம் நிந்திப்பர் உண்மையாக இருந்துவிட்டால்
இரத்தம் கொஞ்சம் வடிந்தாலும் உண்மைக்காக தாங்கிக்கொள்
குத்தமொன்றுச் செய்தாலும் தயக்கமின்றி ஒத்துக்கொள்!

லஞ்சம் வைத்து இழுப்பார்கள் உறக்கத்திலும் மறுத்துவிடு
அஞ்சும் பத்தும் கைமாறும் பஞ்சம் போக்க என்பார்கள்
கொஞ்சமென்று பல்லிளிப்பார்கள் முடிந்தால் காரி உமிழ்ந்திடு
நெஞ்சுக்குரமாய் நேர்மையை விதைத்து எஞ்சும் வாழ்வில் நிம்மதி நாடு!

தோல்வி தோல்வி என்றாலும் தோளில் தூக்கி முன்னெடு
வேள்வித்தீயினை வளர்த்துக்கொள் வேதனைக் காலத்திலும் சுடர்தரும்
கேள்வி பல வந்தாலும் கேலி பல வந்தாலும் இலக்கு நோக்கி நகர்வதே பதிலெனக்கொள்
ந‌ல்வினை உன்னை கரைச் சேர்க்கும் உழைக்கும் வழியில் நீ நகர்ந்தால்!

வைய்யம் கூடி வாழலாம் வானுயர வாழலாம்
மய்யம் கொண்ட வறுமையை வழக்கொழித்து வாழலாம்
செய்யும் செயலில் நெறியுடனே நேர்மையாக நடந்திடுவோம்
மெய்யானறிவு நாம் காண பொய்யுடன் விரைவில் விலகிடுவோம்!

– சுதர்சன ஸ்ரீநிவாசன்

Copyrighted.com Registered & Protectedhttps://static.copyrighted.com/badges/helper.js

Mystic life

I have never felt the speed of the lights

I know the speed of the days and nights

Rotation and revolution continue forever

Nobody can stop it never and ever.

 

Time takes each of us in different path

Some follow it with undeniable truth

Some follow it with unstoppable wrath

Our journey will be pleased with spiritual growth.

 

The choice we have are different,

The choice we make are also different,

The routes are different, but the roots are same

Designations are different, but destinations are same.

 
 

When, every  action you do are pre-destined

How can you pre-empt yourself from being strained ?

Cross your path by swimming if it is an ocean

If it is a forest, cross your path with caution.

 
 

Some fly  with no attached constraints

Some of them run with few complaints

Many of us walk carrying disappointments

Major people crawl after tasting resentments.

 

Life is not race to compete with others and win

It’s a collection of experience of contrasting twin

One has to go through joy and sorrow; voracity

And hunger; rain and Draught; falsehood and veracity.

 

Desire and content; the list not stops and goes on

Transforming into tranquil state declares one has won

Which will make you to sync with cosmic frequency 

And your living shines with courageous transparency. 

 

Time has concealed purpose of your birth

It reveals neither early nor late, neither in mirth 

Nor in forlorn, everything will make sense

when there is no tomorrow  and you are in past tense.

 

 
 

-Sudharsana Srinivasan

Image Source: http://www.bbc.com/earth/story/20160610-it-took-centuries-but-we-now-know-the-size-of-the-universe

 

Copyrighted.com Registered & Protectedhttps://static.copyrighted.com/badges/helper.js

பெல்ஜியத்தில் தமிழனா?

கடந்த ஆண்டு 2019, பெல்ஜியம் நாட்டில் வேலை நிமித்தமாக வாழ்ந்து வந்த காலக்கட்டமது. இந்தியன் வெளிநாட்டில் வேலைப் பார்க்கிறான் என்றாலே தாய்நாட்டு பாசம் சற்றே அதிகமாகத் தான் இருக்கும். கால்கள் அந்நிய மண்ணில் நடந்தாலும் மனமோ தாயகத்தைச் சுற்றி வரும். இப்படி இருக்கையில் வேலை செய்யும் அலுவலகத்தில் ஜூன் மாதம் எங்கள் குழு லியர்(Lier) எனும் சிறிய‌ டவுனுக்குச்(கிராமம் என்றும் வைத்து கொள்ளலாம்) சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டிருந்தோம்.

ஆளுக்கொரு மிதிவண்டியுடன் சுற்ற ஆரம்பித்தோம். இயற்கை எழில், செல்லும் வழித்தோரும் நிறைந்திருந்தன.நம் ஊரில் எங்கும் சீமைக் கருவேல செடியைப் பார்த்த எனக்கு இது உற்சாகமளித்தது. ஆனால் என் இந்தியாவையும் இதைவிட பசுமையாக மாற்ற வேண்டும் என்ற ஆசை தோன்றிற்று. என்னுடனே சில தமிழ் பேசும் அலுவலக நண்பர்கள் வந்தனர். அந்நாட்டைச் சேர்ந்தவர்களும் உடனிருந்தனர். அவர்களுக்குமே அது தான் முதல் முறை லியர்க்கு(Lier) வருவது.சுற்றுலாப் பயணிகள் அதிகம் வராத இடமது. இங்கு என்ன இருக்கப் போகிறது என்றே  சிம்மர் கோபுரம்(Zimmer Tower) என்ற இடத்துக்கு வந்தோம். அங்கே ஆச்சரியமான ஒன்றைக் கண்டோம்.அப்படி என்னத்தான் பார்திருபீங்க ? அதை சொல்லும் முன், சிம்மர் கோபுரம்(Zimmer tower) பற்றிப் பார்த்து விடுவோம். அது ஒரு மணிக்கூண்டு. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த காவல் கோபுரத்தை 1930ல் லூயிஸ் சிம்மர் எனும் மனிதர் மணிக்கூண்டாக மாற்றுகிறார். இவர் 1888ல் பிறந்து 1970ல் மறைந்தவர். விண்வெளி மற்றும் கடிகார மேதையாக(ஆம் 24 பட சூர்யாவைப் போல்) திகழ்ந்தவர்.

இந்த டவரில் பல விதமான கடிகாரங்கள் இருக்கிறது. மணிக்காட்டி, வாரக்காட்டி, மாதக்காட்டி, லியர்(Lier) நகர கடலலைக்காட்டி, இராசிக்காட்டி, கால பருவனிலைக்காட்டி, சூரிய மற்றும் சந்திரச் சுழற்சியை மய்யம் கொண்ட கடிகாரங்கள் எனப் பல வகையுண்டு. எல்லாமே தொடர்முறையில்(அனலாக்) வடிவமைக்கப்பட்டது, தற்போதுள்ளதுப் போல் எண்முறை(டிஜிட்டல்) அல்ல. நுண் பாகங்கள் கொண்டு தானியங்குகிறது.இதனை வடிவமைக்க அதிக பொறுமையும் கவனமும் தேவை.

இப்படிப் பட்ட டவரைச் சுற்றிப் பார்க்கும் பொழுது, ஒரு இடத்தில் உலக நேரங்களைக் குறிக்க ஒரு பெரிய வட்ட வடிவில் சின்ன சின்ன மணிக்காட்டிகள் இருந்தது. அதன் மய்யத்தில் க்ரீன்விட்ச் இடை நிலை நேரத்துடன் ஒரு மணிக்காட்டிஇருந்தது. அதில் ஆச்சரியமாக‌ இந்தியா மணிக்காட்டியில் தமிழ் எண்களுடன் பொறிக்கப்பட்டிருந்தது. தமிழ் எண்கள் எங்களுக்கே பரிட்சியமில்லை. வெட்கினோம்,ஆனால் வெளிநாட்டவன் முன்பு சொல்ல முடியுமா ? சமாளித்தோம், உண்மையில் புதித‌யாய் கற்றுக்கொண்டோம். சந்ததிச் சாக்கில் தமிழின் பெருமையையும் சொன்னோம்.அப்பொழுது அந்நாட்டு நண்பர்களிடம் நாங்கள் செய்த அலப்பறைச் சொல்லி மாளாது. தமிழ் எண் பெரிதும் பயன்பாட்டில் இல்லை என்றாலும் அதைத் தான் பொறிக்க வேண்டும் என்று எங்கோ இருந்தச் சிம்மருக்குத் தோன்றியிருக்கிறது அல்லது சொல்லப்பட்டிருக்கிறது. அத்தோடு முடிந்ததா இல்லை.

டவரின் கீழ் பகுதியில் ஒரு கண்காட்சி அறை இருந்தது. அதில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்ற பொம்மை இருந்தது.ஆம் ஆடை அடையாளங்கள் அவரை நினைவில் கொண்டுவந்து நிறுத்தியது. ஒரு வேலை அவர் ஐரோப்பாவில் இருந்தப் பொழுது வந்திருக்கலாம். அது மட்டுமின்றி ஒரு கைக்கடிகாரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் புகைப்படமும் இருந்தது. சிம்மர் செய்த கைக்கடிகாரம் போல் இல்லை, பிற்காலத்தில் வைத்திருக்கலாம். யாருக்குத் தெரியும் மக்கள் திலகம் சிம்மரையும் கவர்ந்திருக்கலாம், யாருக்குத்தான் அவரைப் பிடிக்காது. சிம்மர் இறந்தது 1970ல் என்பது குறிப்பிடத்தக்கது.எதோ ஒரு தமிழன் பெரும் துணையாய் இருந்திருக்க வேண்டும் அல்லது அங்கு வாழ்ந்தாவது இருந்திருக்க வேண்டும் என்பது உறுதி. நாங்கள் விசாரித்தப் பொழுது அப்படி எந்த தகவலும் தெரியவில்லை. தெரியாதென்றே பதில் வந்தது. உலக யுத்தக் காலகட்டத்தில் இருந்த யாரேனும் இங்கையேத் தங்கி இருந்திருக்கலாம். இலங்கைத் தமிழாராய் கூட இருக்க வாய்ப்புகள் அதிகம். யாராக இருந்தாலும் தமிழ் ஆர்வம் கொண்ட ஒருவராகத்தான் இருக்க வேண்டும். எனினும், உண்மைத் தெரியாத வரையில் ஊகமே இது.

அன்று நான் மட்டுமல்ல என்னுடன் வந்த தமிழ் நண்பர்கள் அனைவரும் பெருமைக்கொண்டோம்.இத்தனைக்கும் எங்களில் ஒரு முஸ்லிம், ஒரு கிருத்துவர், மீதி இந்துக்களில் எல்லாம் வெவ்வேறு பின்புலத்தைச் சேர்ந்தவர்கள். எல்லோருக்கும் ஒரே பெருமை நம் மொழியையும் நாட்டையும் பற்றி அந்நாட்டவர்களுக்குச் சொல்வதும் வழக்கத்தில் இல்லாத தமிழெண்களை வெளிநாட்டுக் கிராமத்தில் பார்ப்பதுமாக இருந்தது. நாங்கள் எதுவும் செய்யவில்லை, இப்படி தமிழன் தன்னலமின்றி செல்லும் வழியெல்லாம் தன் பங்கை நிறைவறச் செய்யதே சென்று இருக்கிறான்.உலகம் முழுதும் இருக்கும் தமிழ்ச் சமூகம் இன்றும் தான் வந்த பாதையைப் பார்த்தால் பிரமிப்பு தான். தமிழால் தமிழனால் இந்தியா பெருமை கொள்ளச் செய்ய வேண்டும், இந்தியன் என்பதில் தமிழன் பெருமைக் கொள்ள வேண்டும்.

“வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!”

– சுதர்சன ஸ்ரீநிவாசன்

Image Source: All rights reserved to Viruvasan@wordpress.com

Copyrighted.com Registered & Protectedhttps://static.copyrighted.com/badges/helper.js

A treasure of numismatists

Numismatists

Despite none claiming as owner,

Poor want them desperately and

Rich want them out of greed.

One over other they change

the possession – Strangling

Inside various wallets and safe

They trouble all as a revenge.

Conquest of one kingdom

Over the other;change of ruler

Makes those coins to be sidelined.

Many decades later, A kid from the city

opens his grandpa’s attic- Once finely polished

Engraved ruler or emblem of government

Looks faded as the reign of its ruler faded.

“Grandpa can I have it?”

“Those are valueless coins”

“No grandpa,its value is doubled” said the kid.

-Sudharsana Srinivasan

Image Source: Google

முருகா வருக!

Vel

சிறந்த வாசிப்புக்கு கந்தர் சஷ்டி கவச பாடல் மெடில்/ராகத்தில் படிக்கவும்/பாடவும்

முருகனின் சிறப்பு அதுவே காப்பு

நூறு கோடி தேவர்கள் வதைப்பட‌
             நீதி நிலைத்திட  அன்னையின் வேலுடன்
ஆறுமுகத்தவன் மயிலில் புறப்பட
            ஆறாச் சினத்துடன் சூரனை அழித்தான்
நூறு தலைமுறை எம்குலக் காவலன்
             நித்தம் நினைத்திட அருள் செய் வேலவ!             (1)

கார்மேகம் போல் கருணை பொழிந்திட‌
            குழந்தைவேலனால் கவலைகள் கலைந்திட‌‌
போர்குணமிருக்கும் பகையென வருமெனில்
            பகைவரும் பயத்தினில் குமரனை வணங்கிட‌
பார்க்கும் பன்னிரு கண்கள் அடியனை
            பாரியாள் வள்ளி தேவசேனையுடன்.                       (2)

திருச்செந்தூர் விரத யாத்திரை

நீறும் சந்தனமும் நெற்றியில் நிறைந்திட‌
            நடந்தே செந்தூர் விரைந்தே வருவோம்
நீரும் மோரும் வழியினில் பருகிட‌
            நாவும் சொல்லும் நின் பெயர் இனித்திட‌
தேரும் உடம்பும் கயிற்றால் இணைந்திட‌‌
            தாமதமின்றி செந்தூர் வருவோம்.                            (3)

செழித்திடும் வயல்கள் இருபுறம் வழியே 
           சாலையின் ஓரம் பகலும் இரவும்
தெளிந்த பொருனையில் அங்கம் துலக்கிட‌
           தோள்களிரண்டும் காவடி சுமக்க‌
வழியினில் சுடும் வெயில் பாதங்கள் நோவும்
          வடிவேலென்றால் வேதனை தீரும்.                            (4)

திருடன் முன்வந்தான் களவாடிடவே
           திருக்கை வேலுடன் விரட்டி துரத்திட‌
மருதகிரி வாழ் மயில்வாகனனே
           மாலை கழுத்துடன் மங்கலச் சொல்லுடன்
வருவோம் செந்தூர் விரதமிருந்தே
           வருவோம் செந்தூர் செந்திலைக் காண!               (5)

சொந்தம் அவனே சுற்றம் அவனே
        சரவண குகனிவன் இல்லாதோர்க்கு
செந்தூர் அடைந்து கோபுரம் கண்டிட‌
          செய்த பாவங்கள் சிதறி போய்விட
கந்தர் சஷ்டி கவசத்தைப் பாடிட‌
          கடும் பிணியனைத்தும் கரைந்தே ஓடிடும் !        (6)

நிந்திக்கும் கூட்டம்

வறுமையில் வாடும் ஏழையின் மனதில்
          வன்மத்தை விதைக்கும் வஞ்சகர் கூட்டம்
கறுப்பர் கூட்டம் கயவர்கள் கூட்டம்
          கட்டியத்தாரமும் மகளும் ஒன்றாம்
வெறுப்பை பரப்பும் அறிவிலிக் கழகம்
          வக்கிரப் புத்தியாம் கலியுக‌ உச்சம்!                          (7)

நிந்திப்பவர்களை தண்டித்துத் திருத்த  முருகனை அழைத்தல்

கோடி கோடி பக்தர்கள் கோடி
         கடலையும் தாண்டி பக்தர்கள் கோடி
கோடி கோடி புண்பட்ட மனமிங்கு
         கோபம் தீரா அடியார்கள் கோடி
வாடி வாடி வருந்திய மனமிங்கு
         வடிவேல் உன்னை ஒரு பிழை சொன்னால்.           (8)

கூடி கூடி அனைவரும் கூடி
        சஷ்டி கவசம் ஒன்றாய் ஒலித்திட‌
நாடி நாடி நல்வினை நாடி
         நல்வேல் கொண்ட சரவண பவனே
ஆடி ஆடி காவடி ஆடி
         ஆனந்த முருகா வருக வருக!                                          (9)

கந்தா குகனே கருணையின் உருவே
         கொடியவன் எண்ணம் பொடிப் பொடியாக‌
நிந்திக்கும் கூட்டம் சந்திக்கும் துயரம்
         நினைவினில் வந்தால் கைகால் நடுங்கிட‌
எந்தை முருகனை எதிர்த்தவன் திருந்திட‌‌
         எங்கள் இறைவனாம் சண்முகா வருக‌!                   (10)

 

– சுதர்சன ஸ்ரீநிவாசன்

 

Image Source: Google

 

Mullerthal, The little Switzerland

It was on 2019, September. I started from Brussels, Belgium. On a tired Saturday morning I was ready for hiking in Luxembourg on good European sunny day. Mullerthal is the place and we headed via Bitburger, Germany. I had namesake lunch,Pizza which was horrible. Though Bitburger village was beautiful and had some history under it I couldn’t experience it as my destination was Mullerthal which is also called little Switzerland.

Once I reached the Mullerthal, it was already crowded with hikers. Day by day tourists and hikers are in exponential trend. I thought I am going to be surrounded by hikers. While reaching the foothill there were campers with caravans, tents which obviously was looking artificial. World has become so artificial and far away from nature.

Two of my colleague cum friends were also with me. we three started by climbing small hill and we were on flat surface and continued walk for 12.5 KM approx. We chose medium hiking distance path. we crossed golf court and corn fields. The corn fields were dry and sun was high, yes it was 30 degree sunny day in Luxembourg. Lot of walk and we reached mountainous region.

Most part of the hiking I was alone and I let the other two go ahead me. My mouth automatically was singing a song from Ayirathil oruvan(Tamil movie) which was unreleased track though. Few bikers passed us and some other hikers followed us in distance. Farmer was busy with his work. It was different, not in forest, not in city but I felt somewhat in middle.

Last hour and half of the hike was good part. I crossed many uneven hilly area covered with pleasant trees and plants. These green friends took most of the heat and protected me. The rocks on the way was trying to tell me its stories. The sediment rocks looked it had hidden history. Signs indicating the path were sufficient for safe hiking. Finally I reached a small water body. The water was chill and few were already bathing. Just washed my face after 13 KM non-stop hiking(Mere walking).

Surprisingly no animals were found. How can I expect it, as we human being started to enter their region in the name of hiking/trekking/development. In the end it was beginner’s hiking region and you wouldn’t feel bad for yourself.

-Sudharsana Srinivasan

 

 

Practicality of life

In the nocturnal night, mind is refusing to rest,

when mind is resting body joins the death.

 

In the moonless day, anger refuses to calm,

when anger is calm character loses it’s charm.

 

With handful of money, I couldn’t buy a wished ring,

when the price falls down it becomes useless thing.

 

When falsehood rejoices, the truth is sleeping sound,

once everything is over justice comes clowned.

 

I opted for gratuitous  life, days and nights takes shifts,

Deceases and pain were given as milestone gifts.

 

-Sudharsana Srinivasan

 

Tamil Version :

https://viruvasan.wordpress.com/2020/05/03/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%af%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

 

 

 

வாழ்வின் யதார்தங்கள்

ஊரடங்கும் இரவினிலே
                 மனமடங்க மறுக்கிறதே
மனமடங்கும் வேளையிலே
                 உடலடங்கி மரைகிறதே!

நிலவடங்கும் பகலினிலே
                 சினமடங்க மறுக்கிறதே
சினம் தணிந்து வேளையிலே
                 குணம் நாறி போகிறதே!

தனம் கூடி வருகையிலே
                 விலையேறி நிக்கிறதே
விலை வீழும் வேளையிலே
                 பொருள் பொருளற்று போகிறதே!

பொய்கள் கூத்தாடும் காலங்களில்
                 உண்மை உரக்க உறங்குகிறதே
எல்லாம் ஓய்ந்து முடிந்தபின்
                நீதி வந்து சேர்கிறதே!

ஆசை அடங்கும் காலங்களில்
                 வயது கடந்து போகிறதே
வயது கடந்து போகும் போது
                 நோய்கள் வந்து சேர்கிறதே!

– சுதர்சன ஸ்ரீநிவாசன்

 

ஆங்கில பெயர்ப்பு/English Version:

https://viruvasan.wordpress.com/2020/05/12/practicality-of-life/

 

அம்மாவுக்காக…

நடமாட உடல் இல்லை
அலைப் பாய உயிரில்லை
அரவணைக்க‌ ஆளில்லை
ஞாமகங்கள் யேதுமில்லை
ஞாலத்தைச் சுற்றி சுற்றி
சுற்றித் திரிந்தது என் ஆன்மா!

தூரத்தில் ஒரு தவத்தின் வலிமை
என் ஆன்மாவை ஈர்க்க‌
இரு உயிரின் மகிழ்ச்சியில் உருவானேன்
கருவானேன்!

எட்டி எட்டி உதைத்தேன் எட்டும் வரை
தட்டித் தட்டிக் கொடுத்தாயே‍ தாயே!

என் உயிர்ப் பிழைக்க‌
உன் வயிறுக் கிழித்தாய்

அன்று அறுந்தது தொப்புள் கொடி
தொடர்ந்ததோ அறுக்க முடியாத பாசக் கொடி!

– சுதர்சன் ஸ்ரீநிவாசன்

 

 

தமிழ் நடை

உச்சந்தலை வான் பார்க்கக்

கண்ணிரண்டும் நேர் பார்க்க‌

ஒருகைக் காற்றில் அங்கும்

இங்குமாய் அசைவுற்று ஆட‌

மறுகை மீசை முறுக்கக்

காலிரண்டும் செழுமையானப்

பாதையிலே பயணம் செய்யக்

கர்வம் கொண்ட நாவும்

செல்லுமடா நான் தமிழன் என்று!

 

– சுதர்சன் ஸ்ரீநிவாசன்